Publish Date: Sun, 12 Dec 2021 (09:57 IST)
Updated Date: Sun, 12 Dec 2021 (09:58 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பதும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனை செய்ய செய்ய உள்ளார். மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் ஊரடங்கு நீடிப்பது மற்றும் தளர்வுகள் அதிகரிப்பது குறித்து அவர் ஆலோசனை செய்வார் என்றும் கூறப்படுகிறது
நாளை நடைபெறும் ஆலோசனைக்கு பின்னர் இது குறித்து விளக்கமான அறிக்கை முதல் அமைச்சரிடம் இருந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.