Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா! – சென்னையில் மூடப்பட்ட பிரபல ஓட்டல்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:01 IST)
சென்னையில் அடையார் ஆனந்தபவன் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து இரண்டு ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அடையார் ஆனந்தபவன் நிறுவனத்தின் ஓட்டல்கள் தமிழகம் முழுவதும் உள்ள நிலையில் சென்னையிலும் பல பகுதிகளில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கிளையில் பணிபுரிந்த நான்கு பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து ஆனந்தபவனின் சென்னையில் உள்ள இரு கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments