Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா; மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (14:45 IST)
இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரொனா அதிகரித்தலை தவிர்க்க மார்ச் 15 முதல் 21 வரை ஒருவார கால முழு ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் தற்போது நாக்பூரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments