Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோதனை சாவடியை சுற்றி வளைத்த காட்டுயானை! – பல மணி நேரம் பதுங்கி இருந்த ஊழியர்கள்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (11:36 IST)
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியை ஒற்றை காட்டுயானை சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே தமிழக, கர்நாடக எல்லை பகுதியில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்துள்ளனர்.

வழக்கம்போல சோதனை சாவடியில் காவலர்கள் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்த போது காட்டுக்குள்ளிருந்து திடீரென வெளிப்பட்ட ஒற்றை காட்டுயானை சோதனை சாவடி பகுதியையே சுற்றி வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த சோதனை சாவடி ஊழியர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே பதுங்கி கொண்டிருந்துள்ளனர்.

சில மணி நேரங்கள் சுற்றி திரிந்த காட்டுயானை பின்னர் அங்கிருந்து சென்றுள்ளது. சோதனை சாவடியையே காட்டுயானை சுற்றி வளைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments