Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மேலும் ஒரு தற்கொலை

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (14:58 IST)
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா இன்று தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று(புதன்கிழமை) மதியம் இரண்டு மணி அளவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

முடிவுகள் வெளியான நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சல் காரணமாக நேற்று திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி ஒருவரும்,தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த வைஷ்யா என்ற மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை மாணவி மோனிஷா,வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் இரண்டு நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பல அரசியல் தலைவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments