செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

Mahendran
சனி, 29 மார்ச் 2025 (13:48 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றிருக்கிறார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்காகவே டெல்லி சென்றுள்ளார் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
 
இந்த நிலையில், செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றிருப்பது புதிய அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதால், ஒரே நபர் இரண்டு பதவிகளை வகிக்கக்கூடாது என்பதற்காக பொதுச்செயலாளர் பதவியை தனக்காக பெற்றுத் தர வேண்டும் என செங்கோட்டையன் பாஜக உயர்மட்ட தலைவர்களிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
 
மேலும், இதுகுறித்து பாஜக உயர்மட்டத்தில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் தலைமையில் அதிமுக உருவானால், ஓபிஎஸ், சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோருக்கு கட்சியில் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும், ஒருங்கிணைந்த அதிமுக உருவாக பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments