Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியத்திற்கு மேல் மாறிய மனசு; திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (09:16 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கடைசி நேரத்தில் திமுகவிற்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக முன்னாள் கவுன்சிலரான அண்ணாதுரை என்பவரை அதிமுக அறிவித்தது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் முடிய இருந்த நிலையில் மதியம் வரை அண்ணாதுரை வேட்புமனு தாக்கல் செய்யவே இல்லை. இதனால் அதிமுக மாவட்ட தலைமை உடனடியாக வேறு ஒருவரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

இந்நிலையில் அன்று இரவு அதிமுகவிலிருந்து விலகிய அண்ணாதுரை திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிமுக பிரமுகர் திடீரென திமுக தாவியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments