Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒத்துவராத அதிமுக - தேமுதிக டீலிங்... அடுத்து என்ன??

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:23 IST)
நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. 

 
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை தருவதற்கு அதிமுக முன்வந்துள்ள சூழ்நிலையில் இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியது. 
 
ஆனால் தற்போது நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (மார்ச் 09) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments