Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறதா தமாகா?

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறதா தமாகா?
, திங்கள், 8 மார்ச் 2021 (09:22 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. ஆனால், தேமுதிகவிற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தேமுதிகவினர் அதிருப்தியிலும் உள்ளனர்.  இப்போது வரை அந்த கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் மற்றும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல தமிழ் மாநிலக் காங்கிரஸோடும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது த மா கா நிர்வாகிகள், தங்கள் கட்சியின் சின்னமான சைக்கிளைப் பெறுவதற்காக 12 தொகுதிகள் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஒற்றை இலக்க அளவிலேயே தருவதற்கு அதிமுக தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சைக்கிள் சின்னத்தை இன்னும் பெறவில்லை என்பதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட சொல்வதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை… அறிவித்த மாநில அரசு!