Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக 48!! எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் மரியாதை..

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (13:51 IST)
அதிமுக 48 ஆவது ஆண்டை நெறுங்கிய நிலையில் சென்னை தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேறிய எம்.ஜி,ராமச்சந்திரன் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். எம்.ஜி,ராமச்சந்திரன் திறனாலும் அதன் பின் கட்சி பொறுப்பை ஏற்ற ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யத்தாலும் தற்போதும் தமிழகத்தின் அசைக்கமுடியாத கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது.

இந்நிலையில் அதிமுக தொடங்கி 48 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் இருவரும் சேர்ந்து அதிமுகவின் கொடியை ஏற்றிவைத்தனர். மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments