Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணின் உல்லாச மோகம்: குடும்பத்தையே சீரழித்த சம்பவம்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (11:52 IST)
இளம்பெண் ஒருவரின் உல்லாச மோகத்தால் அவரது குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கொடியரசி. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொடியரசிக்கு எதிர்வீட்டு வாலிபரான செந்தில்குமாருடன் தகாத உறவு இருந்துள்ளது.
 
இதனையறிந்த பார்த்திபன், தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத கொடியரசி தொடர்ந்து செந்தில்குமாரிடம் பேசி வந்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த புத்தாண்டு நள்ளிரவு அன்று கொடியரசி செந்தில்குமாருடன் போனில் சிரிச்சு சிரிச்சு பேசியுள்ளார். இதனைப்பார்த்த பார்த்திபன் கடும் கோபமடைந்து கொடியரசியிடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் கொடியரசி தூங்க சென்றுவிட்டார்.
 
கோபத்தின் உச்சத்தில் இருந்த பார்த்திபன், தூங்கிக்கொண்டிருந்த கொடியரசியின் கழுத்தை அறுத்தார். கொடியரசி உயிருக்கு போராடுவதை பார்த்த பார்த்திபன் தாமும் தற்கொலைக்கு முயற்சித்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments