Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூட்டி இருந்த மளிகை கடையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு!

J.Durai
புதன், 3 ஜூலை 2024 (10:26 IST)
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த தோளூர்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவருக்கு சொந்தமான கடையை தொட்டியம் பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு மளிகை கடை வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
 
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் முருகானந்தம் நடத்திவரும் மளிகை கடை முன்பாக பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.
 
இதில் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து போனது. கடையின் சுவரில் சிறு பகுதி பெயர்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த ஞானசேகரன் இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
 
தகவலின் பெயரில் போலீஸ் திருச்சி மாவட்ட ஏடிஎஸ்பி கோடிலிங்கம், தொட்டியம்  காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
முதல் கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
விசாரணயில் பெண்ணுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளதாகபோலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments