Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு: ஆவணங்களை என்ஐஏ-விடம் ஒப்படைக்க உத்தரவு..!

Advertiesment
NIA1
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (15:58 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்த வழக்கை  என்.ஐ.ஏ  முன்வந்து எடுத்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் காவல்துறை ஆணையர் சற்றுமுன் பிறப்பித்து உள்ள உத்தரவு ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் உள்ள ஆவணங்களை என்.ஐ.ஏ  இடம்  ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்த வழக்கு குறித்து கிண்டி போலீசார் வழக்கு ஆவணங்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாளில் கிண்டி போலீசார் வழக்கு ஆவணங்களை என்.ஐ.ஏ  அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு பேசிய வழக்கின் ஆவணங்களை பெற்ற பின்னர் என்.ஐ.ஏ  இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கும் என்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளி மற்றும் அவருடைய பின்னணி குறித்து விசாரணை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறைக்கைதிகள் விடுதலை விவகாரம்: 31 கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி..!