Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடத்தகராறில் கோவில் பூசாரி வெட்டிப் படுகொலை- இளைஞர் ஒருவர் கைது!

J.Durai
புதன், 3 ஜூலை 2024 (10:25 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ்.
 
அதே ஊரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலில் பூசாரியாக உள்ளார்.
 
இதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான இடம் 40 சென்ட் இந்த கோவிலின் அருகே உள்ளது, இதில் 10 சென்ட் கோவில் இடத்தில் உள்ளதாகவும்,10 சென்ட் கோவிலுக்கு சொந்தம் என பூசாரி பவுன்ராஜ்-க்கும், தனக்கு சொந்தம் என முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  இரவு கோவிலில் உள்ள விளக்குகளை போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த பூசாரி பவுன்ராஜ்-யை கோவில் முன்பு இடைமறித்த முருகன், இந்த இடப்பிரச்சனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இதில் இடப்பிரச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு கூறி பூசாரி பவுன்ராஜ் தெரிவிக்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூசாரி பவுன்ராஜ்-யை தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
 
படுகாயமடைந்த பூசாரி பவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு முருகனைக் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இடத்தகராறில் பூசாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அரசு சொத்தை வக்பு சொத்து என ஆக்கிரமித்து மசூதி கட்டிய விவகாரம்: நீதிமன்றம் அதிரடி..!

பொது இடங்களில் மாஸ்க் அவசியம்.. கேரள முதல்வர் அறிவுறுத்தல்.. தமிழகத்தின் நிலை என்ன?

மனைவியிடம் அடிவாங்கியதை வெளியே தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டும்: பிரெஞ்ச் பிரதமருக்கு டிரம்ப் அறிவுரை..!

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments