Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்பிக் கொண்டே இருந்த மூதாட்டியை வெளியே வீசிய மருத்துவமனை ஊழியர்கள்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (08:38 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் இரும்பிக் கொண்டே இருந்ததால், அவரை மருத்துவமனை ஊழியர்கள் தூக்கி வெளியே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்துமா நோயால் மேரி(67), என்ற மூதாட்டி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் நேற்றிரவு மேரி தொடர்ச்சியாக இரும்பிக் கொண்டே இருந்தார். இதனால் கோபமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை தூக்கிச் சென்று அருகில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டில் வீசிவிட்டு சென்றனர்.
 
அந்த மூதாட்டி இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தார். மறுநாள் காலை மேரியை கண்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மூதாட்டியை வெளியே வீசிய மருத்துவமனை ஊழியர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments