Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பேனரால் வந்த வம்பு: கடைசி நேரத்தில் நின்றுபோன திருமணம்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (10:45 IST)
ஆரணியில் பேனர் வைப்பது சம்மந்தமாக நடைபெற்ற தகராறில் கடைசி நேரத்தில் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
ஆரணியை சேர்ந்த திமுக பிரமுகரான ராஜகோபால என்பவரது மகள் சந்தியாவிற்கும் அதிமுகவை சார்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கட்சியை தாண்டி இரு வீட்டாரும் நட்புடன் பழகி வந்தார்கள். கல்யாண வேலை தடபுடலாக நடைபெற்றது. 
 
நேற்று காலை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில், பெண் வீட்டார் வம்படியாய் மண்டபத்திற்கு அருகே திமுக பேனரை வைத்தனர். இதனால் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
கடைசியில் திருமணம் நிறுத்தப்பட்டது. அந்த பெண்ணிற்கு அருகில் இருக்கும் கோவிலில் வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஒரே ஒரு பேனரால் திருமணம் தடைபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments