Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (10:05 IST)
விழுப்புரத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை அவரது கணவனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் வாட்டம் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் நெருங்கிப் பழகியதால் ஜெயந்தி கர்ப்பமானார்.  
 
இதனால் ஜெயந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை சீனிவாசனிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் சீனிவாசன் பல காரணங்களை சொல்லி இதனை தட்டிக்கழித்து வந்துள்ளார். 6 மாத கர்ப்பத்தின் போது ஜெயந்தி தனது பெற்றோரிடம் இதனை கூறியுள்ளார். அதிர்ந்துபோன பெற்றோர்கள் கடந்த 20 தினங்களுக்கு முன்பு சீனிவாசன் ஜெயந்திக்கு திருமணம் செய்து வைத்தனர்.
 
இந்நிலையில் ஜெயந்தியை கோவிலுக்கு அழைத்து சென்ற சீனிவாசன், அவரை அடித்துக் கொன்றுள்ளார். பின் ஒன்றும் தெரியாததுபோல், மனைவியை காணவில்லை என காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸார் சீனிவாசனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் சீனிவாசன், ஜெய்ந்தியுடன் வாழப்பிடிக்காததால் அவரை அடித்துக் கொலை செய்தேன் என கூறினார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments