Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 சிறுமியை சீரழித்து, சிறுமியின் முகத்தை சிதைத்த அயோக்கியன்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (09:24 IST)
6 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, சிறுமியின் முகத்தை சிதைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டம் கொண்டுவரப்பட்டும் இந்த அவல சம்பவங்கள் குறைந்த பாடில்லை.
 
மத்திய பிரதேச மாநிலம் மொரினா நகரை சேர்ந்த சிறுமி அனு. இவர் தனது பெற்றோருடன் குவாலியர் நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றார். சிறுமியின் பெற்றோர் திருமண வேலைகளில் பிஸியாக இருந்ததால், சிறுமியை கவனித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
 
சற்று நேரம் கழித்து மகள் காணாததால், அனுவின் பெற்றோர் மணடபம் முழுவதும் தேடினர். ஆனால் எங்கு தேடியிம் சிறுமி கிடைக்காததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மண்டபத்திற்கு சற்று தொலைவில், சிறுமியின் உடலைக் கைப்பற்றினர். சிறுமியின் முகம் முழுவதுமாக சிதைக்கப்பட்டிருந்தது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
சிசிடிவி கேமரா காட்சி மூலம், விசாரணையை மேற்கொண்ட போலீஸார், சமையல்காரன் ஒருவன் சிறுமியை வெளியே அழைத்துச் சென்றது தெரிய வந்தது. தலைமறைவாக இருக்கும் அவனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்