Webdunia - Bharat's app for daily news and videos

Install App

974 தபால் வாக்குகள் செல்லாதவை: நெல்லை தொகுதியில் சோகம்..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (14:37 IST)
திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் 3000 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 974 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நெல்லை தொகுதியில் மொத்தம் 3000 தபால் வாக்குகள் பெற்றதாகவும் அதில் காங்கிரஸுக்கு 913 வாக்குகள், பாஜகவுக்கு 600 வாக்குகள் கிடைத்ததாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
 
தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 322 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 62 வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் முறையாக விண்ணப்பத்தை நிரப்பாதது உள்ளிட்ட சில காரணங்களுக்காக 974 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
ரும்பாலும் தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள் தான் பதிவு செய்து வரும் நிலையில் 974 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments