Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறிநாய் கடித்ததில் சிறுவன் பலி – சங்கரன்கோவிலில் நடந்த சோகம் !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (10:07 IST)
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று கடித்ததில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிக்கு அருகே ரெங்கசமுத்திரம் எனும் கிராமம் உள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேதுபதியின் (38) மகன் சந்தோஷ் (8). இவன் அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான்.

நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த சந்தோஷ் வழக்கம்போல விளையாட வெளியே சென்றுள்ளான். ஆனால் வெகுநேரமாகியும் அவன் வீடு திரும்பாததால் ஊர்முழுக்க அவனைத் தேடியுள்ளனர். அப்போது அந்தோனிராஜ் என்பவரின் தோட்டத்தின் அருகே சந்தோஷ் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தான்.  வெறிநாய்கள் கடித்து சிறுவன் தெரியவந்துள்ளது. மேலும் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரையும் வெறிநாய்கள் கடித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது. ஊருக்குள் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments