Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பி வீட்டுக்குள் விட்ட நண்பர் – மனைவியை கூட்டிப்போய் வாடகை வீட்டில் வசித்த துரோகி !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (09:53 IST)
நாகர்கோவிலின் அருகே உள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தனது சக தொழிலாளியின் மனைவியோடு ஓடிப்போய் வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது.

நாகர்கோவிலில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளி ஒருவர், வேலை நிமித்தமாக தனது நண்பரை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வந்துள்ளார். வந்த நண்பர் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் அன்பாகப் பழகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் மனைவியிடமும் நல்லவர் போல நடித்துள்ளார். இதனால் நாளடைவில் நண்பருக்கும் தொழிலாளியின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது மறைகாதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இதையறிந்த கணவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

கணவர் கண்டித்த அன்றே இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து கணவர் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் அளித்துள்ளார். சில நாட்கள் விசாரணைக்குப் பிறகு இருவரும் அருகில் உள்ள வேறொரு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலிஸார் அறிவுரைக் கூறியுள்ளனர். குழந்தைகள் அழுவதைப் பார்த்த பின் அந்த பெண் தன் குழந்தைகளோடு செல்ல முடிவெடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments