Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பி வீட்டுக்குள் விட்ட நண்பர் – மனைவியை கூட்டிப்போய் வாடகை வீட்டில் வசித்த துரோகி !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (09:53 IST)
நாகர்கோவிலின் அருகே உள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தனது சக தொழிலாளியின் மனைவியோடு ஓடிப்போய் வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது.

நாகர்கோவிலில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளி ஒருவர், வேலை நிமித்தமாக தனது நண்பரை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வந்துள்ளார். வந்த நண்பர் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் அன்பாகப் பழகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் மனைவியிடமும் நல்லவர் போல நடித்துள்ளார். இதனால் நாளடைவில் நண்பருக்கும் தொழிலாளியின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது மறைகாதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இதையறிந்த கணவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

கணவர் கண்டித்த அன்றே இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து கணவர் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் அளித்துள்ளார். சில நாட்கள் விசாரணைக்குப் பிறகு இருவரும் அருகில் உள்ள வேறொரு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலிஸார் அறிவுரைக் கூறியுள்ளனர். குழந்தைகள் அழுவதைப் பார்த்த பின் அந்த பெண் தன் குழந்தைகளோடு செல்ல முடிவெடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments