Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (11:05 IST)
இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் விசைப்படகில் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்தனர் 
 
மேலும் படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விசைப்படகையும் மீன்பிடிக்கும் வலையையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகிய 
 
8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு தங்கள் மீனவர்களை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments