Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகருக்கு ஒரே வெட்டு..! மாயமான லோக்கல் ரௌடி லோகம்மாள்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (10:57 IST)
சென்னையில் திமுக பிரமுகரை வெட்டி கொன்று விட்டு பெண் ரௌடி தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தாம்பரம் அருகேயுள்ள எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். திமுக கட்சி பிரமுகரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லோகம்மாள் என்ற பெண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. லோகம்மாள் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ: 8 மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை: எந்த மாநிலத்தில் தெரியுமா?

இந்நிலையில் நேற்று மாலை சதீஷுக்கும், லோகம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகம்மாள் சதீஷை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரௌடி லோகம்மாளை தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள்: சபாநாயகருக்கு பரிந்துரை செய்த முதல்வர் ஸ்டாலின்..!

திமுக எம்பிக்களின் டீசர்ட் வாசகங்கள்.. சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments