Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4,136 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2023 (11:09 IST)
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
இதனை அடுத்து வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி வரை தகுதியானவர்கள் இந்த உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 
 
எனவே தகுதி வாய்ந்தவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments