Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 31-க்குள் 40 % கல்விக் கட்டணம் வசூல்: திக்குமுக்காடும் பெற்றோர்?

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (17:15 IST)
தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  
 
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டிய சூழலில் கொரோனா காரணத்தால் பள்ளி திறப்புகள் தள்ளி போவதால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றன. 
 
இந்நிலையில் பள்ளி கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் மனு அளித்தன. அதன் மீதான விசாரணையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என்றும், பெற்றோர்கள் தாமாக முன் வந்து கல்வி கட்டணத்தை வழங்கும் பட்சத்தில் வாங்க தடையில்லை என்றும் விளக்கியது.  
 
இதனைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளில் 3 தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. அதாவது தற்போது 25%, பள்ளிகள் திறக்கும் போது 25%, அடுத்த 3 மாதங்களுக்கு பின்னர் 25% என கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு அறிவுறுத்தியது. 
 
அதனப்டி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, 2020 - 2021 ஆம் ஆண்டின் 40% கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஆக்ஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம். இதன் பின்னர் மீதமுள்ள 35% கல்வி கட்டணத்தை 2 மாதங்களுக்கு பிறகு வசூலித்துக்கொள்ளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments