Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி திமுகவின் மோதல் சம்பவம்: 4 பேர் சஸ்பெண்ட் என அறிவிப்பு..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (18:13 IST)
திருச்சி திமுகவினர் மோதல் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திருச்சியில் இன்று திருச்சி சிவா மற்றும் கேஎன் நேரு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர் என்பதும் இரு தரப்பினார் மாறி மாறி காவல் துறையினரிடம் கொடுத்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் திருச்சி சிவா வீட்டில் உள்ள கார் உள்பட விலை உயர்ந்த பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் திருச்சி சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 
 
திமுக நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்து செல்வம், துரைராஜ், ராமதாஸ் ஆகிய நான்கு பேரும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments