பேசின் பிரிட்ஜ்–வியாசர்பாடி ரயில் மேம்பாலத்தில் மழை நீர்: 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (19:59 IST)
பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள ரயில் மேம்பாலத்தில் மழை நீர் அடைத்துள்ளதால், ஈரோடு, திருப்பதி, மைசூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் பல விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்த தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (அக். 15) மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16058) ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இதுபோல, மாலை 4.35 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயிலும், இரவு 11 மணிக்கு புறப்பட உள்ள சென்னை சென்ட்ரல் – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
மேலும், இரவு 9.15 மணிக்கு புறப்பட இருக்க வேண்டிய சென்னை சென்ட்ரல் – மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் (16021) ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

மீண்டும் இந்திய பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

கடந்த 10 நாட்களில் வெறும் 10 ரூபாய் மட்டுமே உயர்ந்த தங்கம் விலை.. ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments