Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்போர்ட் அலுவலகம் இயங்காது: 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (19:55 IST)
கனமழை எச்சரிக்கையால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் நாளை அதாவது அக்டோபர் 16ஆம் தேதி இயங்காது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் நாளை முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார் 

ALSO READ: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?
 
அதேபோல் தொடர் மழை காரணமாக நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments