Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வாரம் 2 புயல்கள்; அதிர்ச்சியில் தமிழகம்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (17:51 IST)
வங்கக் கடலில் அடுத்த வாரம் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


 
தென்கிழக்கு பருவ மழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவ மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரும் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வடகிழக்கு பருவ மழை சராசரி அளவு 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்த வாரம் வங்கக்கடலில் 2 புயல்கள் உருவாகும் என்றும், அந்த புயல்கள் நெல்லூரில் இருந்து கடலூருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மேலும் வடகிழக்கு பருவ மழையால் இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விடகொஞ்சம் குறைவான மழை பொழிவுதான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments