Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை - விழுப்புரம் தொழில்நுட்ப பணி: 19 மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரங்கள்..!

Mahendran
புதன், 18 செப்டம்பர் 2024 (11:45 IST)
சென்னை கடற்கரை - விழுப்புரம் மார்க்கத்தில் சென்னை கடற்கரை யார்டில் தொழில்நுட்ப பணி நடைபெறவுள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - சென்னை கடற்கரைக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு அதே நாட்களில் இரவு 8.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு செப். 19, 21 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.
 
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய ரயில்கள், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு செப். 19, 21 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
 
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு செப்.18, 20 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 10.10, 11.00 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
 
கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரைக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
 
திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. 
 
இவ்வாறு சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஜர் வெடிப்பிற்கு இஸ்ரேல் தான் காரணம்.. சரியான தண்டனை அளிக்கப்படும்: லெபனான் !

அப்பவே ஹிட்லிஸ்டில் இருந்த பாலாஜி? என்கவுண்ட்டர் செய்தால்தான் ரவுடியிசம் குறையும்!- முன்னாள் டிஜிபி ரவி!

10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் தேர்தல். விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?

தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments