Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது சிறுவன் சரமாரியாக வெட்டி கொலை.. அடையாறு ஆற்றில் உடலை வீசிய கொடூரம்..

Siva
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (16:25 IST)
சென்னையில் 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்டு உடலை அடையாறு ஆற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே பொதுமக்கள் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆற்றின் கரையோரம் ஒரு சடலம் இருந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இறந்தது 17 வயது சிறுவன் என்றும் சிறுவனின் உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு இருந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்தபோது எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் அருகே சஞ்சய் என்ற 17 வயது சிறுவன் தான் கொலை செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. ஏற்கனவே இந்த சிறுவன் மீது சில வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

 இதனை அடுத்து சிறுவனை கொலை செய்தது யார்? ஆற்றில் தூக்கி வீசியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments