Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர்கள் 12 பேர் மணல்திட்டில் தவிப்பு: இந்திய கடற்படை மீட்பு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (19:10 IST)
இலங்கை தமிழர்கள் 12 பேர் மணல்திட்டில் தவிப்பு: இந்திய கடற்படை மீட்பு!
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வர முயற்சித்த 12 பேர் இடையில் உள்ள மணல் திட்டில் தவித்த நிலையில் அந்தப் பக்கமாக வந்த இந்திய கடலோர காவல்படை அவர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது 
 
இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு இலங்கை அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர்
 
இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல்திட்டு  பகுதியில் உணவு தண்ணீரின்றி 12 பேர் தவிப்பதாக கடலோர காவல் படைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அவர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை மீட்டு பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்
 
காலை முதல் உணவின்றி தவித்த அவர்களுக்கு அங்கிருந்த மீனவர்கள் உணவு கொடுத்து உதவி செய்தனர் என்பதும் தற்போது அவர்கள் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

சமூகநீதி வேடம் கலைகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காதது ஏன்? விஜய் கேள்வி

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்? தண்டனை சட்டம் வந்தும் இதே நிலை! - மக்களின் கோரிக்கை என்ன?

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments