Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (19:04 IST)
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு அரசியல் தலைவர்கள் யாரும் அறிக்கை விட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
காய்ச்சல் அதிகமாகி வருவதை அடுத்து அண்டை மாநிலமான புதுவையில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தமிழகத்திலும் அதேபோல் விடுமுறை அளிக்க வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை மூலம் அறிவித்து வருகிறார்கள் என்றும் இந்த காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்றும் எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதட்டத்தை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்: டிரம்ப்

வீடு புகுந்து இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments