Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவன் பலி.. 1,000க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல்..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (12:38 IST)
ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவன் விபத்தில் பலியானதை அடுத்து 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடலூர் தேவாரம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம் காட்டியுள்ளனர் 
 
இந்த நிலையில்  பேருந்து காலதாமதம் ஆனதால் கல்லூரி மாணவர் ஒருவர் ஆட்டோவில் சென்ற நிலையில் அந்த ஆட்டோ விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 
 
இதனை அடுத்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததே விபத்திற்கு காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டிய நிலையில் திடீரென 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை சமாதானம் செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments