Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேர்: தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (15:49 IST)
மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 

 
மதுரை நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க போது விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் எத்தனை நாட்கள் கழிவுநீர் தொட்டியை மனிதர்களால் சுத்தப்படுத்த போகிறோம். சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரியுள்ளனர். 
 
இந்நிலையில் மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த நிறுவனம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். முதற்கட்டமாக தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்மொழிக் கொள்கை பத்தி நீங்க பேசாதீங்க விஜய்! - தமிழிசை பதிலடி!

அடுத்த மாதம் +2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்! மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments