Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தீப்பிடித்த பைக், தெறித்து ஓடிய மக்கள்! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (15:38 IST)
சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று பூந்தமல்லியில் தனது இருசக்கர வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்து விட்டு சிடிஎச் சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது நடுவழியில் திடீரென பைக் தீப்பிடிக்கவே அலறிய அவர் பைக்கை சாலையிலேயே நிறுத்தி விட்டு இறங்கி ஓடியுள்ளார். சிறிது நேரத்தில் பெட்ரோல் டேங்கிலும் தீப்பிடித்ததால் பைக் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. அக்கம்பக்கம் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றும் முடியவில்லை.

பின்னர் டிராக்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்துள்ளனர். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் காரணமாக பெட்ரோல் டேங்குகள் தீப்பிடிக்கலாம் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments