Publish Date: Thu, 22 Jan 2009 (15:51 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (15:51 IST)
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லதா அதியமான் இன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அவைத் தலைவர் அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் லதா அதியமானுக்கு அவைத் தலைவர் ஆவுடையப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், ஐ. பெரியசாமி, கோ.சி. மணி, நேரு, எ.வ.வேலு, தமிழரசி, பொங்கலூர் பழனிச்சாமி, செல்வராஜ், தங்கம் தென்னரசு, மைதீன்கான், பரிதி இளம்வழுதி, பெரிய கருப்பன், துணை அவைத் தலைவர் துரைசாமி, தலைமை கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, சட்ட மன்ற செயலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்றதும் லதா அதியமான் முதலமைச்சர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.