மலேசியாவில் இந்துக்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து தடையை மீறி சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே இந்து முன்னணி அறிவித்திருந்தது.
இதற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து விட்டதால் தடையை மீறி இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் உள்பட 26 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.