Publish Date: Mon, 10 Nov 2008 (15:31 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்காக திரட்டப்பட்டு வரும் நிவாரண நிதி ரூ.19 கோடியை தாண்டியது.
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளையேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக அதன் தலைவர் கே.வி. தங்கபாலு மற்றும் டி.சுதர்சனம் ரூ. 5லட்சம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்கள் சார்பில் ரூ.17,33,000 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகப் பணியாளர்கள் சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
இதேபோல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகப் பணியாளர்கள் சார்பில் ரூ.2,75,200, நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சார்பில் ரூ.2,21,100 உள்பட பலர் நிதி வழங்கியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 19 கோடியே 87 லட்சத்து 87 ஆயிரத்து 155 ரூபாய் நிதியாக குவிந்துள்ளது என்று தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.