Newsworld News Tnnews 0810 20 1081020005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாநிதி மாறன் ர‌ா‌ஜினாமா கடித‌ம்: கருணா‌நி‌‌தி‌யிட‌ம் கொடுத்தார்!

Advertiesment
தயாநிதி மாறன் கருணாநிதி ராஜினாமா கடிதம்
, திங்கள், 20 அக்டோபர் 2008 (11:41 IST)
முதல்வர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று சந்தித்து, நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தார்.

webdunia photoFILE
இலங்கை‌த் தமிழர் பிரசசனை தொடர்பாக, முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து‌‌க்கட்சி கூட்ட‌த்‌தி‌ல், இலங்கை‌த் தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த, மத்திய அரசு 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரும் ராஜினாமா செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, தி.ு.க.வைச் சேர்ந்த நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்கள் முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை, அவரது இல்லத்தில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இதன்பின் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய தயாநிதி மாறன், அனைத்து‌க்கட்சி கூட்டத்தின் முடிவுப்படி முத‌ல்வ‌‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் கடிதத்தை கொடுத்தேன் எ‌ன்று‌ம் இந்த பிரசசனையில் மற்ற தி.ு.நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களை போன்று நானும் செயல்பட்டுள்ளேன் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil