Publish Date: Sat, 06 Sep 2008 (16:56 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:11 IST)
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் இன்று கடலில் கரைக்கப்பட்டன.
சிவசேனா கட்சியினர் குமார்ராஜா மற்றும் ராஜேஷ் ஏற்பாட்டின் பேரில் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
வண்ணாரப்பேட்டை, கொருக்குபேட்டை, ராயபுரம் பகுதியில் உள்ள சிலைகள் காசிமேடு துறைமுகத்துக்கு மாட்டு வண்டியிலும், டெம்போ வேனிலும் ஏற்றி செல்லப்பட்டது. பின்னர் ராட்சத கிரேன் உதவியுடன் கட்டுமரத்தில் ஏற்றி சென்று கடலில் கரைக்கப்பட்டது.
தென்சென்னை, மத்திய சென்னை பகுதியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிலைகள் பட்டினபாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. இன்று மட்டும் 400க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.