Publish Date: Fri, 25 Jul 2008 (17:34 IST)
Updated Date: Fri, 25 Jul 2008 (17:34 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புறப்பகுதிகளில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தில் நேற்று உட்புறப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி, மருங்காபுரியில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.
வால்பாறை, மங்களாபுரம், பரங்கிப்பேட்டை, தேவக்கோட்டை, சூலூர்பேட்டையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புறப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.