Publish Date: Sat, 21 Jun 2008 (15:28 IST)
Updated Date: Sat, 21 Jun 2008 (15:28 IST)
இந்திய கடல் எல்லைக்கு நுழைந்த 28 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர காவல் படையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 65 கடல் மைல் தொலைவில் சில படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.
உடனே அவர்கள் அருகில் சென்ற காவல் படையினர் விசாரித்தனர். அப்போது அவர்கள் இலங்கை மீனவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இடம் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் அவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்கள் வந்த 6 படகுகளையும் பறிமுதல் செய்த அவர், தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை கடலோர காவல்படையினர் இன்று தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது