Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நக்சலைட்டுகளை ஒடு‌க்கு‌ம் முய‌‌ற்‌சி‌யி‌‌ல் இற‌ங்கு‌ங்க‌ள்: இல.கணேசன்!

Advertiesment
நக்சலைட்டுகளை ஒடு‌க்கு‌ம் முய‌‌ற்‌சி‌யி‌‌ல் இற‌ங்கு‌ங்க‌ள்: இல.கணேசன்!

Webdunia

, வெள்ளி, 21 டிசம்பர் 2007 (16:22 IST)
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஊடுருவல் இல்லை என ஊடகத்துக்கு அறிக்கை தருவது எந்த அளவு உண்மையில்லை என்பது வருசநாட்டில் பிடிபட்ட ஒருவன் சத்திஸ்கர் மாகாணத்தை சேர்ந்தவன் என்பதில் புலனாகிறது. இனியாவது ஆபத்தை உணர்ந்து ஒடுக்கும் முயற்சியில் இறங்குங்கள் எ‌ன்றல.கணேச‌னவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாதமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நக்சலைட்டுகளை நசுக்க சிறப்புப்படை தேவை என பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார். நேபாளம் துவங்கி நெல்லூர் வரை இருந்த அவர்களது நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆந்திரத்தில் ஓரளவு ஒடுக்கப்பட்டிருந்த நக்சலைட்டுகள் தேர்தலில் தங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வந்த பிறகு தடை நீக்கி வளரவிட்ட பெருமை காங்கிரசையே சாரும்.

நேபாளம் முதல் நெல்லூர் வரை என்றிருந்த நக்சல்கள் நடவடிக்கை இன்று வருசநாடு வரை விரிவடைந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊடுருவல் இல்லை என ஊடகத்துக்கு அறிக்கை தருவது எந்த அளவு உண்மையில்லை என்பது வருசநாட்டில் பிடிபட்ட ஒருவன் சத்திஸ்கர் மாகாணத்தை சேர்ந்தவன் என்பதில் புலனாகிறது. இனியாவது ஆபத்தை உணர்ந்து ஒடுக்கும் முயற்சியில் இறங்குங்கள் எ‌ன்றல.கணேச‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil