Newsworld News Tnnews 0711 02 1071102004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை-நாகர்கோவில், தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள்: இன்று முன்பதிவு தொடக்கம்!

Advertiesment
நாகர்கோவில்

Webdunia

, வெள்ளி, 2 நவம்பர் 2007 (10:10 IST)
தீபாவளியை முன்னிட்டு சென்னை‌யி‌ல் இரு‌ந்து நாகர்கோவில், தூத்துக்குடி இடையே இய‌க்க‌ப்படு‌‌ம் சிறப்பு ர‌யி‌ல்களு‌க்கான மு‌ன் ப‌திவு டி‌க்கெ‌ட் இ‌ன்று முத‌‌ல் தொடங்குகிறது.

தீபாவளியை முன்னிட்டு, நாளை (3ஆ‌ம் தே‌தி) சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வ.எண். 0609) இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

இதேபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 5, 12 ஆ‌கிய தேதிகளில் சிறப்பு ரயில் (0606) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 6, 13 ஆ‌கிய தேதிகளில் சிறப்பு ரயில் (0605) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் (0606) கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 10ஆ‌ம் தேதி முதல் ஜனவரி 5ஆ‌ம் தேதி வரை சனிக்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரயில் (0607) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 11ஆ‌ம் தேதி முதல் ஜனவரி 6ஆ‌ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் (0608) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் (0608) கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil