Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழை : மேட்டூருக்கு நீர்வரத்து உயர்வு

Advertiesment
மழை : மேட்டூருக்கு நீர்வரத்து உயர்வு

Webdunia

, ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (12:56 IST)
டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக டெல்டா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து இன்று காலை திடீரென வினாடிக்கு 21,507 கன அடியாக உயர்ந்தது. நேற்று மாலை வரை நீர்வரத்து 16,300 கன அடியாக மட்டுமே இருந்தது.

நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 10,000 கன அடியில் இருந்து 18,295 கன அடியாக உயர்ந்தது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.670 அடியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil