Newsworld News Tnnews 0708 03 1070803007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடல் கொந்தளிப்பு : மெரீனாவை மூழ்கடித்து திரும்பியது!

Advertiesment
கடல் கொந்தளிப்பு மெரீனா

Webdunia

, வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (15:15 IST)
வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கடல் கொந்தளிப்பு இன்று மேலும் அதிகரித்ததன் காரணமாக கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் சென்னை மெரினா கடற்கரையை மூழ்கடித்து திரும்பியது.

ஜப்பான் கடற்கரை பகுதியில் நேற்று மித நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. அதேபோல் அமெரிக்க கடற்கரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து, கரையில் இருந்து சுமார் 200 மீ தூரத்திற்கு கடல் அலைகள் வந்து மெரினா கடற்கரையை மூழ்கடித்து சென்றது. இதேபோல், தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட கடல் பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் யாரும் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil