Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெபாசிட் இழந்தால் கெஜ்ரிவால் அரசியலை விட்டு வெளியேறுவதாக உறுதி அளிக்கவேண்டும் - பாபா ராம்தேவ்

Advertiesment
இந்தியா
, திங்கள், 17 மார்ச் 2014 (11:39 IST)
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட தயாரென பேசும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெபாசிட்டை இழந்தால் அரசியலை விட்டு வெளியேற தயாரா என பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
FILE

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பிரதமர் பதவியை அடைய அவசரம் காட்டுவதாக கூறிய பாபா ராம்தேவ் அவர் சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட தயாரென ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தது குறித்து பேசிய பாபா ராம்தேவ், கெஜ்ரிவால் வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியி்ட்டு டெபாசிட்டை இழந்தால் அரசியலை விட்டு விலகுவதாக உறுதி அளிக்க வேண்டும்.
webdunia
FILE

கெஜ்ரிவால் அவரது அறிவை இழந்துவிட்டார். சோனியா மற்றும் ராகுல் காந்தியின் ஊழல் ஆட்சி குறித்து ஏதும் பேசாமல் அமைதியாக இருக்கும் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக நடப்பது போல செயல்படுகிறார் என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil