இருதய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அதிகாலை வீடு திரும்பினார்.
இதுகுறித்து பிரதமரின் பிரத்யேக மருத்துவர் கே.எஸ்.ரெட்டி கூறுகையில், அவரது (பிரதமர்) உடல் நலம் சீராகவும், நலமாகவும் உள்ளது. எனவே அவர் இன்று அதிகாலை 6.30 மணியளவில் இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) இருந்து வீடு திரும்பியதாகக் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக எய்ம்ஸ் சென்றார்.
அதில் அவருக்கு இருதயத்தின் சில பகுதிகளில் அடைப்பு இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை பிரதமர் வீடு திரும்பியுள்ளார்.