Newsworld News National 0901 05 1090105028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரில் 5வது நாளாக துப்பாக்கிச் சண்டை

Advertiesment
துப்பாக்கி ஜம்மு காஷ்மீர் பூஞ்ச்
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 5வது நாளாக இன்றும் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது.

பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் பகுதியில் ஜெய்ஷ்-ஈ-முகமது மற்றும் லஷ்கர்-ஈ-தயீபா ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவம் தேடுதல் நடவடிக்கையைத் துவங்கியது.

மெந்தார் பகுதியிலுள்ள படி-டார் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் துவங்கியதால், படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இன்று 5வது நாளாக தொடர்ந்து சண்டை நீடிக்கிறது. இச்சண்டையில் இதுவரை 4 தீவிரவாதிகள் மற்றும் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

உயர் ராணுவ அதிகாரிகளும், காவல்துறையினரும் அப்பகுதியில் முகாமிட்டு நிலைமையை நேரில் கண்காணித்து வருவதாக பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil